இந்த உலகத்தில் பசியில்லை,
சாவில்லை,பயமில்லை,நோயில்லை.
எங்கும் அமைதி.
அதில் வாழ எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது.

சூரியன் உதித்தது,
புதிய உலகம்.
அதில் நோய்க்கு பஞ்சமில்லை
சண்டை,பசி,பயம் ,சாவு
எதற்கும் பஞ்சமில்லை

மீன்டும் என் பழைய உலகத்திற்கு செல்ல
பத்து மனி நேரம்.

பாதை மறவாது செல்வேனா ?

இப்ப மணி 10 ஆகுது ..சனிக்கிழமை ஆபீஸ் இல்லாததால பிரச்சனை எதுவுமில்லை. நேத்து நைட் நடந்த அந்த பார்டியில் ஒரே கூத்து அடிச்சிட்டு .... எப்புடி வண்டிய வீட்டுக்கு சரியா ஓடிட்டு வந்தேன்னு எனக்கு இன்னும் தெரியுல ஒரே தண்ணி மப்பு ..தலை வலி இன்னும் ஏதோ மதிரியவே இருக்கு.



காலிங் பெல் .சத்தம் ...டிங் டிங் . போலீஸ் வீட்டு வாசல்ல நிக்குறாங்க என்ன நடந்துச்சு நேத்துன்னு சரியா தெரியுல..... ஒரு வேலை நைட் யாரு மேலயாவது வண்டிய எதியிருப்போமா ?? .. இல்ல வேர யாரு வண்டிய தூக்கிட்டு வந்துட்டோமா ..


ரூம்மேட்ஸ் வேர இல்ல ..இப்ப என்ன பன்றது ஒரே டென்ஷன்னா இருக்கே .. போலீஸ் : சார் நேத்து நைட் என்ன நடந்துச்சி நீ உங்க டூ வீ லர எங்க எதுத்துட்டு போனீங்க ..?????

சார் அது வந்து ,நான் ..நான் ..


0.75 பைசாக்கு ஒரு பொட்டலம் தான் கடலை வாங்கினேன் இரென்டு பொட்டலம் வாங்கிருந்தா மீதி என்ன சொல்லுவான்னு தெரிஞ்சிருக்கும் முன்னாடி பக்கத்துல பைக் படம் போட்ருக்கு . 75 ம் பக்கத்துல இது மட்டும் தான் போட்ருக்கு .. மீதி பக்கம் இப்புடி இருக்கு எப்புடி இருந்துருக்குமோ ..


இது பக்கம் என் : 75 மட்டுமில்லை பதிவு என்னும் தான்..

மறக்க நினைத்த போது
நினைவுக்கு வந்தது ...
நினைவுக்கு வந்தவுடன்
மறக்க நினைத்தது
?????
வாங்கிய கடன்
பழைய காதல்
எழுதிய பரிட்சை ...

பொறுமை தீர்ந்தது..
தாய் நாட்டை நோக்கி என்
பயனம் தொடர்கிறது..

பதிவுக்கும் எனக்கும் சிரிது காலம்
விடுமுறை..

மீண்டும் ஒரு சிரிய இடைவேளைக்கு பின்
சந்திப்போம்..

கதை கவிதை
இரண்டிற்கும் ஒரு
ஓற்றுமையும் உண்டு.

கவிதையின் பிறப்பிற்கு
பல சோகக்க் கதைகள்
உண்டு
கவிதைக்கு க(வி)தை விதை

-- ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து
மாற்றுக் கருத்து உண்டு ..சொல்லிட்டு போங்க

அலைகள் மட்டும் தான் ஓயாதா?
என்னுள் இருக்கும் சிந்தனைகளும்
தான்..

கண்ணன் கொடுத்த சீலை
மட்டும் தான் தீறாததா ..
இல்லை என்னுள் இருக்கும்
ஆசைகளும் தான்..

சூரியன் மட்டும் தான்
திசை மாறாது உதிக்கலாமா ?.
இல்லை
நான் செய்யும்/செய்த செயல்கள் கூடதான்..

இப்படி அடிக்கிக் கொண்டே
போகலாம்...என் தலைக்கனம்.
தலைவிரித்து ஆடி அடங்கும் வரை...


பல வருடங்களாய்
அடைப்பட்டு.
சாவியில்லாத பெட்டிக்குள்ளிருந்து
வெளிவரத் துடிக்கும் புதையல் தான்
காதல்...
-சாவி கிடைத்தவர்கள் காதலைத் (புதையலைத்)
தொளைத்துவிடுகிறார்கள்,
-சாவி இல்லாதவர்கள்
புதையலைத் தேடுகிறார்கள்.


என்றுமே
வெள்ளையாய் கண்ட நிலா..
இன்று எழுந்த பொழுது..
கண்ணேதிரே
கையருகே..

உடனே
என் நினைவெல்லாம்
அதில் நிறம் பூச ஆசை..

கையருகே என்
கண்களை கூசிய
நட்சத்திரங்கள்..

கற்களை தூக்கி எறிவதய் போல்..
எறிந்து விளையாட
ஆசை..

திடீரென என்னுள் ஒரு மாற்றம்..
நிலவு கையருகே..இருக்கிறதே..
நான் சொர்கத்தில் இருக்கிறேனா..
இல்லை வானே கீழ்
இறங்கியதா..

யோசித்த பொழுது,,மணி
அடித்தது,..பரிட்சை நேரமும்
முடிந்த்து..

--- பதில் தேர்வின் முடிவில்

ஊருக்கே கொடுத்தது வெளிச்சம்
வெட்டியான் வாழ்க்கைக்கு
மட்டும் இருட்டு...
மின்மயானம்

பொறுமை
விதைக்கு மட்டும் தான் சொந்தம்
என்று நினைத்தேன்.
உன் பதிலுக்காக நான் காத்திருந்த பொழுது
தெரிந்தது அது பொய்யென்று

ப்ராஜெக்ட் லீட்லயிருந்து...டாவ் அடிக்குர பெண் வரை
இது பொருந்தும்.

நேரமிருந்தா கருத்த சொல்லிட்டு போங்க...


நீ என்னை பார்த்து சிரித்து கொண்டேயிருந்தாய்
நான் ரசித்திக்-கொண்டேயிருந்தேன்..
உன் அழகில் என்னை மறந்தேன்..
உன்னை கட்டி அனைத்து முத்தமிட நினைத்தேன்,..
அனைத்து முத்தங்களையும் உன்
புகைப் படத்திற்கே கொடுக்க மனமில்லை.
உன்னை நேரில் காண நாட்களை
கடத்தி கொண்டிருக்கிறேன்..

இந்த பதிவு - யாரு யார பிரிஞ்சிருந்தாலும்
பொதுவா பொருந்துமுங்க..

நேரமிருந்தா உங்க கருத்த சொல்லிட்டு போங்க...

உனக்கு கல்லூரியிலே

கடிதம் கொடுக்க
நினைத்தேன்..

ஆனால் உன் பார்வையிலே
என்னை விரட்டினாய்..

இன்று உன்னைத்தேடி
முகவரி அறிந்து வந்து
கொடுத்த போது..

நினைவுக்கு வருகிறது
அன்று காதலன்
இன்று தபால்காரன்

நமக்கு தீராதா இந்த சாபம்
அன்று படிப்பறிவில்லை..
வெள்ளையன் நம் நாட்டையும்
நம்மையும் மிதித்தான்..

இன்று படித்தும்.
படிப் பறிவிருந்தும் ..
நாம் அன்னிய மண்னை மிதித்தோம்.
பெருமை தான்..

அன்னிய மண்னில் மிதி படுகிறோமே..
விடியாதா நம் நாட்கள்?
- அன்னிய நாட்டில் வாழும் உங்களில் ஒருவன்..

ஐம்பதில் முடியாதது இருபதில் முடியுமா?
என்ன இது தன்னி அடிச்சிட்டு பேசுறமாதிரியிருக்கா ?

T20 கிரிக்கெட் பத்தி...ஒரு சின்ன கற்பனை..

ஒன்னும் இல்லைங்க ..என்ன என்னமோ மாதிரி யோசிக்கிறாங்க இப்ப எல்லாம்.
நானும் யோசிச்சி பாத்தேன்..ஒர்க் அவுட் ஆச்சினா ..மோடி அண்ணனுக்கு ஒரு
ஃபோன் பன்னனும்...

20-20 ரசிகர்கள் ஏறாலம் இப்போ...
எல்லா நாட்டு  கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை வைத்து 

ICL,IPL..  
உலக 11 vs.  உலகின் சிறந்த அனியுடன்..ஆட்டம் ..
உலக 11 vs  ஆப்பிரிக்கா 11..
இன்னயிலிருந்து T20 உலகக்கோப்பை...ஆரம்பம்.....வேர

ஏன் இப்புடி ஒரு முயற்ச்சி செய்யக்கூடாது..

உலகின்...தலை சிறந்த இடது கை ஆட்டக்காரர்கள் ஒரு புரம்..
எதிரில் தலை சிறந்த வலது கை ஆட்டக்காரர்கள்..

ஒரு கற்பனை அனி தயார் செய்து விளையாட வைச்சி பாக்க ஆசை...
எந்த கைக்கு பலம் அதிகம்ன்னு நாமும் தெரிஞ்சிக்கலாம்....

நீங்க..என்ன நினைச்சாலும் உங்க கருத்த சொல்லிட்டு போங்க...

நித்தம் ஒரு வாதம்..
அவை முடியாத விவாதம் 
பிரமாதம் என்று நினைத்து
நாம் செய்தவையைச் பேசி பெருமிதம்..

சிந்தனைகள் அனைத்தும் வினோதம்
பிறர்சொல் கேட்காது பிடிவாதம்.
நினைத்தவை அடையாத போது வருத்தம் 
நன்பர்களை கண்டவுடன் ஆனந்தம்.

பொருத்தம் இன்றி இருக்கும் அந்த வரிகளை 
திருத்(தம்) செய்யக் கூட - தம் வேண்டும்

மொத்தம் நம் வாழ்க்கையில் தம் 
ஒன்று தேவை!
அடிக்காமல் இருக்க முடியவில்லை

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
 உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க

ஒரு சின்ன கற்பனை,முடிஞ்சா ரசிங்க
---------------------------------------------

அந்த வாட்ச் கடைக்காரருக்கு இனிப்பு
கொஞ்சம் கூடப்பிடிக்காது?

ஏன் அவருக்கு சுகரா (சர்க்கரையா ? )
அவருக்கு கடி’காரம்’ தான் பிடிக்கும்...

---------------------------------------

அவருக்கு கொஞ்சம் கூட தன்னி அடிக்கிற
பழக்கம்மில்லைன்னு சொன்னீங்க...ஆனா அவர்
மேல தன்னி அடிச்ச வாடை வருதே...

இருக்காதா அவர் பெரு சிங்கா’ரம்’ ஆச்சே

-----------------------------------
அந்த கோவில் வாசல்ல கடை வச்சிருக்கிறவர
ஏன் எல்லாரும் இந்த அடி அடிக்கிறாங்க..

பாவம் தமிழ் ஒழுங்கா எழுத வராது போல..
பக்த கோடிகள் ‘பத்தி’ இல்லாதவங்க ..பத்தி வாங்கி செல்லவும்ன்னு போர்ட்
வைக்கிறதுக்கு பதிலா..

பக்த கேடிகள் ‘புத்தி’ இல்லாதவங்க ..புத்தி வாங்கி செல்லவும்ன்னு போர்ட்
வைச்சிருகார்.

-----------------------------------------------------
ரொம்ப  கடிச்சிருந்தா.. நான் பொறுப்பில்லை 

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
  உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க

பெண்னே உன் கை தொட்டு
நான் உரச ஆசைதான்.
நீ என்னை 
தொட்டபோது 
இருந்த சுகம்...
உரசும் போது 
இருந்த சுகம்,
என் நினைவை விட்டு
மறையும்முன்..
என் வாழ்க்கை உன் கையிலே மறைகிறது..
நீயோ என்னை மறந்து..
அடுத்த ஒன்றைத் தேடுகிறாய் 
-- எரிந்த தீக்குச்சி 

ஒரு சின்ன கற்பனை,முடிஞ்சா ரசிங்க

அந்த பல் டாக்டர் போலி டாக்டர்ன்னு நினைக்கிறேன்.
அந்த ஆள் பாத்திரக்கடை வைச்சிருப்பான்னு 
நினைக்கிறேன்...

பல்லு வெள்ளையாக்க என்ன பன்னலாம்ன்னு கேட்டா
சாம்’பல்’ போட்டு தேய்ன்னு சொல்ரான்யா,
--------------------------------------------------------------------

எனக்கு ப்ராஜெக்ட்ல பல் காட்றவங்கள
பாத்தா கொஞ்சம் கூட பிடிக்காதுடா..

ஏன் எந்த ஃபிகரும் உன் கிட்ட பேசலன்னு
கடுப்பாடா? 

இல்லடா நான் சொதப்’பல்’  பத்தி சொன்னேன்

-----------------------------------------------------------------
ஒரு தாத்தா லாலா கடைக்குபோய் பக்கோடா
கேட்டார் ..பல் இருப்பவர் தான் பக்கோடா
சாப்பிட முடியும்னு சொல்லிட்டாரு..

அப்போ கப்’பல்’ சாப்பிடுமான்னு கேட்டார்.மடக்க
நம்ம ஆள் பதில் இப்புடியே பேசினா 
செப்’பல்’ தான் வரும்னுட்டார்.

-----------------------------------------------------
ரொம்ப  கடிச்சிருந்தா.. நான் பொறுப்பில்லை 

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
  உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க.

நூற்றுக்கணக்கான எழுத்துக்களிருந்து 
   ஊருவாக்கப்பட்ட 
பல்லாயிரக்கணக்கான சொற்களில் 
எந்த சொல்லை நான்
தேர்ந்தெடுத்து வரிகள்
   அமைக்க என்னுள் குழப்பம்..

அமைக்கும் வாக்கியத்தில் 
பொருள் சேர்க்க நான்
போராடும் போராட்டம்.....

அமைந்த பொருளுக்கு
ஏற்றவாறு தலைப்பு 
வைக்கமுடியாமல் தவிக்கும் தவிப்பு..

ஒவ்வொரு பதிவுக்கும் 
உங்கள் மனதை என் பக்கத்துக்கு
கவர நான் செய்யும்
யுக்திகள் நாடகங்கள்...
அப்பப்பா...
 நம்மால முடியல

எனக்கு இப்புடியெல்லாம்..இல்லைங்கோ..


  பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
  உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க.

இது போதாத காலம்ன்னு
நினைக்கிறேன்.
ஆஃபிஸ் பி . எல் லயிருந்து
பன்னி வரை எதை பாத்தாலும் இப்ப
எல்லாம் பயமாயிருக்கு...


தெரியாம கூட தும்ம முடியுல.
தும்மின பின்னாடி ஊருல எல்லாபயலும்
நம்மலயே பாக்குறாங்கய்யா..


ஒரு பேச்சிக்கு கூட சின்ன
பசங்க மாதிரி பன்னி நாய்ன்னு
கூட இனி சொல்ல முடியாது போல.
சகல ஜனங்களுக்கும் சொல்ல வர மெசேஜ்
இனி பேச்சுக்குகூட எதாவது மிருகம்
பெயர சொல்லிடாதீங்க...


முன்னாடி கோழி..
இப்ப பன்னி..
அடுத்து எது ரெடி ஆகுதுன்னே தெரியுல,....


தும்மல் வரமாதிரி இருக்கு..
அப்புறமா மீட் பண்ண்லாம்..


பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க.

நான் போர்களங்களை சந்தித்ததில்லை
இருந்து,ம் என் மீது 
பட்ட வெட்டுகள் கணக்கில்லை
என் மீது குத்தப்பட்ட ஈட்டிகள்
எண்ணில் இல்லை

நான் பட்ட அடிகள்
மத்தலங்கள் கூட தாங்கியதில்லை 
நான் சுவாசித்த அனல் காற்றினை
எவறாலும் தாங்க முடியாது

வளர்ச்சி இல்லாத நான் உன்
உடள் பருமத்தின் மாற்றத்திற்கு
ஏர்த்த வாரு மாறத்தெரியவில்லை
--- தொப்பையை மறைக்க முடியாத என் சட்டை 

இராம்போ,இராக்கி ..டெர்மினேட்டர்..இதெல்லாம் ஒரு சீக்குவள்..அதே போலத்தான்..இதுவும்...

எப்பவுமே ஒரே மாதிரி எழுதுனா நல்லா இருக்காது..
ஆனாழும் இந்த ஊருங்களப்பத்தி உங்க எல்லாத்துக்கும் சொல்லிட்டு
விட்டுடலாம்னு நினைக்கிறேன்..

இது ஒரு ‘quiz' போட்டியில்ல.ஆனா பதில்
படிச்ச பின்னாடி ஃபீல் பன்னக்கூடாது
’சேம் ப்லட்...’

1) இந்த ஊர்ல இருக்கும் மக்கள் எல்லாம் கொஞ்சம்
பைத்தியும் பிடிச்சமாதிரி இருப்பாங்க ?
....
.....
.....
 2)இந்த ஊர்ல இருக்கும் மக்கள் எல்லாம் கொஞ்சம்
முட்டாள் தனமா நடந்துக்குவாங்க ?
....
.....
.....

3)இந்த ஊர்ல இருக்கும் மக்கள் எல்லாம்  நம்ம
ஊர் மக்கள் மாதிரியே மாட்டுக்கு முக்கியத்துவம் 
தருவாங்க? 
....
.....
.....

4) இந்த ஊர் நம்ம சர்தாருக்கு ரொம்ப பிடிக்கும் ?
நம்ம நாட்ல இல்லை :0
....
.....
.....
5)இந்த ஊர்ல இருக்கும் மக்கள் எல்லாம்  வெயிலுக்கு
பயப்பட மாட்டாங்க? 
....
.....
.....

6)இந்த ஊர்ல இருக்கும் மக்கள் யாருமேலயும்
மோத தயங்கமாட்டாங்க ?

....
.....
.....
7)இந்த ஊர்ல இருக்கும் மக்கள் காய்கறி 
வாங்க மாட்டாங்க? 
....
.....
.....
இதோ பதில்

1)’மேட்’ரிட் 

2)காட்’மண்டு’

3)மாஸ்'கவ்' (மாஸ்’cow')

4)டர்பன்

5)’கேப்’டவுன்

6)’பேங்க்'காக்

7)ஷாங்’காய்’

இனிமேல் கடி இருக்காதுங்கோ....

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க. 

சட்டை கிழிங்சிருச்சி புது  சட்டை போட்டிருக்கிறேன் 
...இப்போ புது ‘template' பயன் படுத்துறேன்  அத தான் அப்புடி 
சொன்னேன்..

போன முறை மொக்கை..இன்னைக்கு 
அந்த மாதிரியில்லை

உன் மேனியை அழகாக்க..
என் மேனியை அழுக்காக்கினாய்..
எனக்கு மாற்றம் கிடைத்தது
நானும் கரைந்தேன்
பாவம் நீ மட்டும் இன்னும் 
மாறவில்லையே..
---- நறுமனத்துடன் சோப்பு


நீ விட்ட குறட்டையின்
சத்தம் என் காதைக் கிழித்தது..
நான் வருந்தவில்லை.
ஆனால் நான் விட்ட கொட்டாவி
சத்தத்தில் நீ தூக்கம்
கலைந்து என் தலைதட்ட
நினைப்பது என்ன நியாயம்
... அடிவாங்கும் அலாரம்


பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க.

கொஞ்சம் வித்தியாசமா பதிவ போடலாம்னு
முயற்ச்சி பன்னிருக்கேன்.
இது ஒரு ‘quiz' போட்டியில்ல.ஆனா பதில்
படிச்ச பின்னாடி ஃபீல் பன்னக்கூடாது

1)கொஞ்சம் வெயிட்டான நாடு.. (அமெரிக்கா இல்ல.. அதுக்கும் மேல..)
..
..
...

2)இந்த நாட்டோட பேர சொன்னா மத்த நாடுங்க கோபமா இருக்காங்களான்னு தெரிஞ்சக்க்லாம்.
...
..
...

3)பாசம் மிகுந்த நாடு..
...
...

4)இந்த நாட்டுல திருடங்க ரொம்ப ஈஸியா திருடுவாங்க..
....
....

5) இந்த நாட்டுல பணமே யூஸ் பண்ணமாட்டாங்க..
...
...

இதோ பதில்..

1)’கன’டா..

2)U’காண்டா’

3)'தாய்'லாந்து..

4)டர்'கீ'..

5)’செக்’ கோஸ்லோவியா..

சும்மா இருக்கிறது கஷ்டம்..அதவிட 
மொக்க போடுறது ரொம்ப கஷ்டம்

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க.


எத்தனை இனிய தேனை
 சேகரிக்கும் தேனீக்கு
என்றுமே அந்த தேன் சொந்தமில்லை 

எத்தனை அழகாய் தான் 
வசிக்க  கட்டும் புற்றுக்கு,கரையான் 
என்றுமே சொந்தமில்லை

எத்தனை காலமாய் உழைத்து
லட்சங்களாய் சேர்க்கும் பணத்திற்கு 
மனிதன் என்றுமே சொந்தமில்லை

எதை நாம் சேர்க்க நினைக்கிறோமோ
அது நமக்கு 
சொந்தமற்று போகிறது... 

புன்னகையை சேர்க்க நினைப்பவனுக்கு
மட்டுமே
பகைமை சொந்தமற்று போகிறது.

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க


இடம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்
நட்சத்திர பட்டாளம் அணியின் தலைவர்
அது நம்ம கேப்டன் ‘கேப்டன்’ தாங்க...
சில பெயர் தெரிந்த மசாலா நடிகைகள் குவிந்த அணி
நம்ம கேப்டன் அணி.

எதிர் அணி. நம்ம வம்பு அணிங்க
நயன் கூட இருக்கார்... ஏங்க இப்புடி யோசிக்கிறீஙக
நம்ம கிரிக்கெட் அணி முன்னாள் விக்கெட் கீப்பர்
நயன் மொங்கியா வ சொன்னேன்.. இந்த போட்டிக்கு ஆங்கில கமெண்ட்டேடரா இருக்கார்...


வம்பு அணி நிர்ணயிக்கபட்ட 20 ஒவெர் ல..(இப்ப T20 தான் ஃபேமஸ்)
100 ரன் அடிச்சிருச்சு.. கேப்டன் அணில கடைசி விக்கெட் ஜோடி.. கேப்டன் நிக்கிறார்..
'அவரு நாட்ட மட்டும் இல்ல அணியவும் காப்பாத்துவார்'.


ரெண்டு பந்துக்கு 12 ரன்க்ள் எடுக்கனுங்கற வெற்றி இலக்கு
கேப்டனே சந்திக்கிறார். வம்பு அணி தலைவர் (யார் ன்னு நான் வேற சொல்லனுமா) வீசுறார்.வீசிய பந்து கேப்டனுக்கே சவாலா இருந்திச்சு..
கேப்டனால தொட முடியல...


கடைசி பந்து.. வீசிட்டார்..
ஒவ்ர் ஸ்டெப் ம் ஆகல. நோ பால் இல்ல. ஃப்ரி ஹிட்டும் இல்ல
ஆணா நம்ம கேப்டன் அணி வெற்றி பெறுகிறது .
..
எப்படி....
...
..
..
ரொம்ப யோசிக்கிறீங்களா..
போட்ட ஃபுல் டாஸ் பால கேப்டன் அடிச்சதுல பால் ரெண்டா ஒடஞ்சி
லெஃப்ட் ல ஒன்னு ரைட் ல ஒன்னு
பௌண்டரிக்கு வெளிய...


இதை பார்த்து அம்பயர் மிரண்டு போய்ட்டாரு. ரெண்டு சிக்ஸ். 12 ரன் குடுத்தாரு.வம்பு அணி பயங்கர கோவத்துல அம்பயர அடிக்க போனப்ப
அம்பயர் சொன்னார்.


பதிவ படிக்கிறவங்களுக்கும் ...வம்பு அணிக்கும்
இந்த மெசேஜ்..
இன்னக்கி ஏப்ரல் ஒன்னுங்க
இந்த மாதிரி ஆட்டத்துல மட்டும் இல்ல...
எல்லாத்துலயும் எப்படியும் ஏமாத்துவாங்க..
ஜாக்கிரதையா இருங்கன்னு


சோ டேக் இட் ஈசிங்க..


பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க

அன்று பரிட்சையில் பதில்களை
எழுத நினைத்தேன்
வார்த்தைகள் கிடைக்கவில்லை.
கற்பனை குதிரை மட்டுமே
மனதில் ஓடியது.
பரிட்சையில் எழுதமுடியவில்லை...
தவறிவிட்டேன்...
இன்று பதிவிலே எழுத நினைக்கிறேன்
வார்த்தைகள் கிடைக்கவில்லை.
இது ஒன்றும் புதிதல்ல.
ஆனால் மனதில் ஓடிய
கற்பனை குதிரையின் சுவடுகளைக்கூட
என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை..
பதிவிலே தவற மனமில்லை..
தேடிக் கொண்டே இருக்கிறேன்
தேடிய வார்த்தைகள் கிடைக்குமா ?

ஐம்பதாவது பதிவுங்க இது
பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க

பாட்டி ஆசையாய் அழைத்தாள்
கதை சொல்ல...
பள்ளியில் இருந்து வந்த பேரனுக்கு.


அவனுக்கோ ஒரே பசி, வழியில் கண்ட மெது வடை
மீது இருந்த அந்த ஆசை இன்னும்
மனதை விட்டு நீங்கவில்லை.
அம்மாவிடம் ஓடிப்போய்
வடை வேண்டும் என்று கேட்டான்...

எண்ணெய் பதார்த்தம் கெடுதி என்று சொன்னாள்.
அவன் அழத் தொடங்கினான்.
பாட்டி தான் வடை சுட்டுத்தருவதாக
சொல்ல. குழந்தையின் ஆசையை கெடுக்க
மனமில்லாமல்.மாவை பிசைய
தொடங்கினாள் அம்மா..

எண்ணெய் கொதித்து கொண்டிருந்ததால்
அவனை அங்கிருந்து போக
சொன்னாள்..அவனோ ஒரு வடை போடுவதை
பார்த்துக்கொண்டே இருந்தான்.
வடை சுட்டு கொண்டிருந்த பாட்டி அவனை அழைத்து
நீண்ட நாளாக  அவன் கேட்டுக்கொண்டிருந்த
சொர்க்க நரக கதை சொல்லஆரம்பித்தாள்.

பாட்டி கதையில் தவறு செய்தவர்களை
 நரகத்தில் வடை சுடுவதை போல் என்னெயில்
சுட்டெடுத்து பூதங்கள்
உணவாக தந்துவிடுவார்கள் என்றாள்.

எண்ணெயில் கொதிக்க வைத்த பதார்த்தம்
கெட்டவை என்றும். நரகத்திழுள்ள
பூதங்கள் மட்டுமே
உணவாக சாப்பிடும் என்று
அதனால் தான் அம்மா எண்ணெயில்
சுட்ட பதார்த்தம் கெட்டது என்று
சொன்னாள் என்று நினைத்து
பயத்தில் நடுங்க ஆரம்பித்தான்.

அம்மா வடைகளை அவனுக்கு
ஆசையாய் ஊட்ட நினைத்த
போது..அவன் தான் எண்ணெயில்
சுட்ட சாப்பாட்டை தின்பதனால்
தானும் பூதமாக மாறிவிடுவோம்
என்ற பயத்தில் வடைகளை
கையில் எடுத்து வீட்டை விட்டு
வெளியே ஓடினான்..

என்ன செய்யப்போறான்னே தெரியலயா?

பாட்டி சுட்ட வடையாச்சே
அவன் தூக்கிப்போட
ஒரு காக்கா தூக்கிட்டு போயிருச்சி..

எத்தனை சர்ட்டிஃபிகேசன் பன்னிருந்தும்
இன்னும் ப்ராஜெக்ட் கிடைக்க மாட்டிங்குது..
நானும் எத்தனை கம்பெனிக்கு முயற்சி 
செய்தும் எங்க இருந்தும் ஒரு இ-மெயில்
கால் கூட இன்னும் வரல

நான் தினம் எனக்கு வர 
ஃபார்வெர்ட் இ-மெயில் எல்லாத்தையும் 
படிக்கிறத மட்டுமே  முழு நேர வேலையா போச்சு.

இந்த வாரத்துலயாவது பென்ச்லயிருந்து
எதாவது ஒரு  ப்ராஜெக்ட்ல போயிரனும்..

இப்ப இருக்கும் நிலவரத்த பார்த்தா 
ப்ராஜெக்ட் இல்லைன்னா வேலைய விட்டு
தூக்கிருவாங்க போல..

இந்த வாரக்கடைசிக்கு என்ன பன்னலாங்குர
யோசனை கூட இன்னும் வரல ஏன்னா இன்னைக்குதான்
திங்கள் கிழமை.. 

சரியா காலை 10:30 மணியாகுது
ஒரு சின்ன காஃபி ப்ரேக் போய்ட்டு வந்தரலாம்..
யாராவது கூட வராங்களான்னு போய் கேக்குறேன் ..யாருமே வரல.

ஒரு இன்கம்மிங் ..லோக்கல் நம்பர்..
மச்சான்...... நீயா..சொல்லு..
கேள்விப்பட்டியா,,, நிறைய கம்பனில 
வேலைய விட்டு தூக்குறாங்கன்னு ஆரம்மிச்சி.
ஒரு அரைமணி நேரம்..

11:00 மணியாயிருச்சி இன்னும் எவன் கிட்ட
இருந்தும் ஒரு இ-மைல் கூட வரல..
இதோ ஒன்னு..

கார்பரேட் ஹெச் ஆர்
இந்த வார கடைசிக்குள்  எந்த ஒரு 
ஃப்ராஜெக்ட் கிடைக்க வில்லை என்ற தருனத்தில்
கம்பனி நலன் கருதி. உங்களை வேலயை
விட்டு  நீக்க வேண்டியிருக்கும்..

இப்படிக்கு உங்கள் 
கார்பரேட் ஹெச் ஆர்
 
தலையே சுத்துரமாதிரி இருக்கே..
என்ன பன்றதுன்னே தெரியலையே..
இப்ப வேலை போச்சுன்னா,கிடைக்க நாள் ஆகுமே..
என்ன பன்றது ,..யார் கிட்டயாவது சொல்லலாமா ?
யார் கிட்டயாவது இதே மாதிரி இ-மெயில் வந்துருக்கன்னு
கேக்கலாமா?

யார்கிட்டயும் சொல்லாம அமைதியா இருப்போம்
வேர யாருக்காவது இந்த மாதிரி  இ-மெயில் வந்துருக்குன்னு 
சொல்லராங்கலான்னு பாப்போம்..

சரியா 12:30 மணி..மதிய சப்பாடுக்கு
எல்லா பென்ச் ஃப்ரண்ட்ஸ் எல்லாத்தோடையும் போலாம்..
ஏதாவது தெரிய வருதான்னு பாப்போம்..
1:45 மணி ஆயிருச்சி எவனுமே அந்த மாதிரி இ-மெயில்
வந்துருக்க மாதிரி சொல்லவேயில்லையே ...

அப்ப நம்ம மட்டும் தான் அந்த லிஸ்ட்ல இருக்கோம் போல..
ஐயோ போச்சே..
என்ன காப்பாத்திக்க வழியே இல்லையா ?
இன்னக்கி ஏப்பரல் ஒன்னு ,,இது அதுக்காக வந்த  ஏதாவத் ஒரு
ஃபார்வெர்ட் இ-மைலா இருக்குமோ..?

சாப்பாடு முடிச்சிட்டு போன உடனே, இ-மெயில்
இன்னும் ஒரு முரை பாக்கனும்...
சீக்கிரமா போய் பாக்கனும்..
அப்பதான் நிம்மதியா இருக்கும்...
அங்க இருந்த யார்க்கிட்டயும் சொல்லாம ஒரே
ஓட்டம் .ஆஃபிஸ் லைப்ரரி கம்ப்பூட்டர்...சீட்ட பாத்து..

யோவ் யோவ்..அந்த ஆள புடிப்பா..
காலையிலேயே 8:45 க்கே இப்படி 
பஸ் ஃபூட் போர்டுல தூங்கி
விழுந்து கிழுந்து சாக போரடா ..
மேல ஏரி வா... சாவுகிராக்கி..

சய்,,,,இவ்வலவும் ஃபூட் போர்ட்ல
தொங்கும் போது வந்த கனவு போல..
ஆஃபிஸ் பஸ்ல தூங்கி ...இன்னைக்கு மிஸ் பன்னிட்டு 
இந்த கூட்டத்துல கூட ஒரு தூக்கம் அதுல ஒரு 
கனவு...

ஆஃபிஸ்க்கு போன உடனே எதுக்கும் இ-மெயில்
பார்த்தா தான் கனவா,,இல்லையான்னு 
தெரியும்....

என் வாழ்க்கை வரண்டு கொண்டே போகிறது...
என்னுடைய  இறுதி நாட்களை தினமும் எண்ணிக் கொண்டிருக்கிறேன்
என்ற சிந்தனை எனக்குள் பெருகிகொண்டே போகிறது.
இத்தனை நாள் எனக்குள் இருந்த சக்தியைக் கொண்டுஓடிவிட்டேன்
இனி எனக்குள்  அந்த நம்பிக்கையில்லை.இக்கடிதத்தை நான் 
எழுதி முடிக்கும் பொழுது என் உயிர் என்னை விட்டு பிரிந்துவிடும்.
நவீன யுகத் தேவைக்கு  என்னை ஆயுத்தம் செய்து கொள்ளாததால்
இந்நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன்.
என்னைப் போலிருக்கும் பலருக்கு நான் ஒரு பாடமாய்
இருப்பேன் என்ற நினைவில் இந்த கடிதத்தை 
எவ்வித வருத்தமின்றி முடிக்கிறேன்.
எனக்காக யாரும் வருந்த வேண்டாம்.இம்முடிவை 
நான் சந்திக்க தயாராயிருக்கிறேன்..

இப்படிக்கு 
என் பழைய பேனாவின் கடைசி சொட்டு மை 
(நாளை முதல் புது பேனா)    

உன்னை எத்தனை முறை
காப்பாற்றினாலும் ..
என்னை நீ புகழ்ந்ததில்லை
நானும் வருந்தியதில்லை
என்றோ ஒரு  நாள் நான் 
உன்னை செல்லமாய் கடித்ததற்கு..
அன்றே என்னை தூக்கி எறிகிறாய்..
     ------வருத்ததுடன் செருப்பு   

மாற்றம் என்னை தினம்
துறத்துகிறது

நேற்றைப்போல் நான் இன்றில்லை
உருவத்தில் மட்டுமல்ல
உள்ளத்தில் கூட.

உள்ளத்தை நானும் மற்றவரும்
உணர நாட்கள் தேவை ..

எனக்குத்தேவை 
புதிய முகம்,,
என் உள்ளத்தை வெளிகாட்டாத முகம்...
முகமுடியல்ல..

ஓயாது ஓடும் 
இந்த நாட்களுக்கு தேவை..

தீராது தோன்றும் என்
குழப்பங்களுக்கு தேவை ... 

தேவையில்லாத என் 
சிந்தனைகளுக்கு தேவை...

கற்பனையும் கனவையும்
நிஜம்மென்று நினைக்கும் என் 
மனதிற்கு தேவை 

இயற்க்கையின் படைப்பில் 
எந்த ஒரு பொருளையும்
மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்
பொழுது அதன் தன்மை
தேய்கிறது,
மனித மூளையை 
தவிர..
மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்
பொழுது மட்டுமே 
சிறப்பாக செயல் படுகிறது..
சில நேரங்களில் நாம்
இயற்க்கையை எதிர்த்து போராட
வேண்டியுள்ளது

தன்னை கடித்த
கொசுவை அடிக்க நினைத்து
தன்னை தானே அடித்துக்
’கொள்ளும்’ / ’கொல்லும்’ 
நாம் ஏமாளியா இல்லை  
கோமாளியா ?

just a funny thought


அன்று ஆட்கள் தேவை
என்ற செய்தியை டீ கடை 
பேப்பரில் படித்தேன்,

இன்று எத்தனை பேருக்கு 
வேலை இல்லை என்ற
செய்தியை அதே டீ கடை 
பேப்பரில் படிக்கிறேன்!

இன்றைய  காலம் 
போதாத காலமா ?

வானவில்லில் உள்ள வண்ணங்கள்
மின்னலில் இல்லை,
இருவருமே வின்னில் தான் பிறந்தார்கள்
இருவருக்கும் வெவ்வேறு குணங்கள்
அவர்களுக்குள் சண்டை இல்லை..
சில நேரங்களில் சந்திப்பதுமில்லை.
விண்ணின் மைந்தர்களின் வாழ்க்கை இப்படி.

ஒரே மண்ணில் பிறந்து
நிறத்திலும் குணத்திலும்
பெரிய வேறுபாடு இல்லாத நம்
மண்ணின் (மனிதர்கள்)மைந்தர்கள் ..
அவர்களுள் ஏன் இத்தனை சண்டை..?
எத்தனை பாதிப்பு!

வானவில்லின் தோற்றலை ஊரெங்கும் 
சிறுவர்கள் ரசிப்பதைப்போல்...
நம் இனத்தவரின் 
சண்டையை ஊரெங்கும் உலகெங்கும்  
வேடிக்கை காட்சியாய்
காட்டி கண்டு ரசிக்கிறது
ஒரு அரசியல் கூட்டம்...

இதை தடுக்க வழியில்லையா?
இல்லை தடுப்பவர்களில்லையா?



விதிமுறை இல்லாமல்
’விதி’யின் முறைப்படி
ஆடும் இந்த வாழ்க்கை ஆட்டத்தில்,
வெற்றி தோல்வி
என்ற பரிசுக்காக
யாருடன் போட்டி,
எதற்கு போட்டி,
என்றே தெரியாமல் 
எதை அடைய இந்த ஓட்டம்?.
’விதி’யை ஒழிப்போம்,
விதிமுறையை தேடுவோம்,
வாழ்க்கை ஓட்டத்தை மாற்றுவோமா?



இருவருமே ஒரே அச்சில் செய்யப்பட்டோமா ?

உன்னிடத்தில் பொறாமை இல்லை.
நான் என்ற தலைக்கனமுமில்லை.
நீயும் நானும் சேர்ந்தே இருந்தும்
நம் முடிவுகள் ஒத்து இருந்ததில்லை

இருந்தும் என்னை
விட்டு நீ விலகவில்லை  
அதனால் தான் என்னுள் இத்தனை குழப்பங்களா?

இல்லை,
உன் ஆசைகளை என்மீது
துளைத்து நீ மட்டும்
நல்லவனாக இருக்க இத்தனை நாடகம்.

இருந்தும் உன்னை விட்டு
விலக எனக்கும் வழி தெரியவில்லை! 
நமக்குள் இந்த போராட்டம் தொடரும்.

 

வியர்வை சிந்த 

உழைத்த காலம் - இறந்த காலம்,
வியர்வை சிந்துவதற்கு  
உழைக்கும் காலம் - நிகழ் காலம்
வியர்வை என்ற வார்த்தைக்கு  
விக்கீயில் பொருள் தேடும் - எதிர் காலம்

என்று முடியும்  

இந்த தொடர் நாடகம்,
என்று மடியும்
இந்த தொலைக்காட்சி மோகம்!

Subscribe to: Posts (Atom)