நான் பள்ளியிலே விட்ட
பட்டத்தின் விலை
இன்றும் மாறவில்லை!
உயர பறக்கிறது.
நான் கல்லூரியிலே பெற்ற
பட்டத்தின் விலை
எத்தனை உயர்வு!
இருந்தும் பறப்பதில்லை.

மலரின் தேன் சொட்டுக்களை
பருக முடியாமல் தனக்கு பற்களில்லை
என்று வண்டுகள் கூட்டம் வாட..

நீந்த மறந்த மீன்கள்
பனிக்கட்டிகளில் சறுக்கியாட ..

உலகமே உறைந்ததோ
என்று நினைக்கும் இந்த
ஆனவ குளிர் காற்றுக்கு..
என் உறையாத சிந்தனை
ஒரு விதிவிலக்கா.. ?,

Subscribe to: Posts (Atom)