தன் இனத்தை தானே

அழிக்க மிருகங்கள் கூட

நினைப்பதில்லை.

ஆனால் ஏன் மனிதன்

இத்தனை வெறி கொண்டு

மிருகமாக திரிகிறான்.

வெடித்தும் வெடிக்கவிருக்கும்

குண்டுக்கள் சாய்க்கபோவது

புற்களை மட்டுமல்ல..எத்தனையோ ..

சொல்ல வார்த்தைகளில்லை..

பட்ட மரங்கள் தளர்ந்ததில்லை

மாண்டு மறைந்தவர்கள்

மீன்டதில்லை ..

மறைந்தவர்களுக்கு என் வருத்தங்கள்

வறட்சியும் பஞ்சமும் தலைவிரித்தாட,
பசியும் போராட்டமும் துரத்த,
பூகம்பமும் சுனாமியும் விளையாட
வெடிகுண்டுகள் மழைப் பொழிய,
பொருளாதார வீழ்ச்சி மந்தப்படுத்த....
இத்தனை இறக்கங்களைத் தாங்கியும்.
உலக கணினித்துறைக்கு
முதுகெலும்பு என் நாடு.
விண் ஆராய்ச்சித்துறையின்
மூலதனம் என் நாடு.
எத்தனை சாதனைகள்
அடுக்கிகொண்டே போகலாம் ...
அடுத்த வெற்றி எதில் ?
அடுத்தது என்ன ?

இருளை கண்டு
பயம் கொள்ளாத என்
விழிகளுக்கு ,ஏனோ
மதிய வெளிச்சத்தை காண
துணிச்சலில்லை.

விடியலை அறிந்து
கூவும் கோழிக்கு (சேவல்)
தன் வாழ்வின் விடியலை
அறிய வழியில்லை,
மனிதனின் மனம்
என்று விளங்குமோ அதற்கு!
வளர்த்தவனே வதைக்கிறான்
எத்தனை கொடுமையடா!

fyi:
chicken lovers please bare

Subscribe to: Posts (Atom)