உலக மக்களின் மகிழ்ச்சியை கான இரு கண்கள்
நற்செய்தியை கேட்டு உணர இரு செவிகள்
எவரையும் புண் படித்து பேசாத அமைதியான வாய்
இன்றே பூத்த பூவை விட ஒரு மென்மையான இதயம்
இவையனைத்தும் படைத்தவன் இறைவன் - இவை இருக்க
இந்த சிறிய மூலையில் தீய சிந்தனை உருவாக்கும் என்னத்தை
படைத்தது ஏனோ ?
அவன் படைப்பு சரியா ?

நிலவுக்கு ஒளி,

இளநீருக்கு சுவை,

மலருக்கு நறுமணம்,

இவை அணைத்தும் - பாருக்கே தெரிந்தவுன்மை!

உனக்குள் என்ன ?

இன்று முதல் உணர்ந்து - செயல் படு

சுவாசிக்க என்றுமே நமக்கு தடையில்லை
சிந்திக்க என்றுமே நமக்கு தடையில்லை
இப்படி இருக்க
நாம் நம்முடைய தலைவர்களின் தியாகத்தை
உணற ஒரு தனி தினம் - --- சுதந்திரம் ?

இரவுபோய் மீன்டும் தோன்றும் சுரியனல்ல நீ
விடியலில் இறக்கும் ஈசலுமல்ல நீ
பனிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சியுமல்ல நீ
நீ தோன்றியது எதற்கு என்பதை அறிந்து,
- இன்றுமுதல் செயல்படு

உனக்கு ஓய்வே இல்லையா ?
எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
என் சிந்தனையில் - காதலி

உனக்கு ஓய்வே இல்லையா ?
எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
என் சிந்தனையே - சிந்தனை

Subscribe to: Posts (Atom)