தன் இனத்தை தானே

அழிக்க மிருகங்கள் கூட

நினைப்பதில்லை.

ஆனால் ஏன் மனிதன்

இத்தனை வெறி கொண்டு

மிருகமாக திரிகிறான்.

வெடித்தும் வெடிக்கவிருக்கும்

குண்டுக்கள் சாய்க்கபோவது

புற்களை மட்டுமல்ல..எத்தனையோ ..

சொல்ல வார்த்தைகளில்லை..

பட்ட மரங்கள் தளர்ந்ததில்லை

மாண்டு மறைந்தவர்கள்

மீன்டதில்லை ..

மறைந்தவர்களுக்கு என் வருத்தங்கள்

வறட்சியும் பஞ்சமும் தலைவிரித்தாட,
பசியும் போராட்டமும் துரத்த,
பூகம்பமும் சுனாமியும் விளையாட
வெடிகுண்டுகள் மழைப் பொழிய,
பொருளாதார வீழ்ச்சி மந்தப்படுத்த....
இத்தனை இறக்கங்களைத் தாங்கியும்.
உலக கணினித்துறைக்கு
முதுகெலும்பு என் நாடு.
விண் ஆராய்ச்சித்துறையின்
மூலதனம் என் நாடு.
எத்தனை சாதனைகள்
அடுக்கிகொண்டே போகலாம் ...
அடுத்த வெற்றி எதில் ?
அடுத்தது என்ன ?

இருளை கண்டு
பயம் கொள்ளாத என்
விழிகளுக்கு ,ஏனோ
மதிய வெளிச்சத்தை காண
துணிச்சலில்லை.

விடியலை அறிந்து
கூவும் கோழிக்கு (சேவல்)
தன் வாழ்வின் விடியலை
அறிய வழியில்லை,
மனிதனின் மனம்
என்று விளங்குமோ அதற்கு!
வளர்த்தவனே வதைக்கிறான்
எத்தனை கொடுமையடா!

fyi:
chicken lovers please bare

சருக்கு மரம்
என்றுதெரிந்தே,
லாபக் கணியைப்
பரிக்க நினைத்து ஏறி
ஏமாறி விழும்
மூடர்களின் கோவில்.

இலக்கை நோக்கி ஏரியப்பட்ட
அம்பல்ல நான்,
இலக்கின்றி சுற்றும்
கடிகார முல்லுமல்ல நான்.

நறுமனமின்றி பூக்கும்
காகிதப் பூவூமல்ல நான்,
மனந்து மயக்கும்
மரிக்கொழுந்துமல்ல நான்.

ஓய்விலே வாழும்
நத்தையல்ல நான்,
ஓயாமலிருக்க
ஏறும்பல்ல நான்.

உலகை மாற்ற நினைக்கும்
பொது-நலமுல்லவனல்ல நான்,
என்னை பற்றி மட்டும்
யோசித்துக் கொண்டிருக்கும்
சுயநலவாதியல்ல நான்!....

என்றோ இறந்த அசுரனுக்காக
இந்த வெகுளி குழந்தைகூட்டத்தின்
ஆட்டம் பாட்டம் இன்றும் தீரவில்லை.
ஆனால் தினம் வாட்டும்
இந்த பசி என்ற
அசுரனை என்று கொல்வோம்
என்று கொண்டாடுவோம்.

--------------------------
குறிப்பு:
வறுமையை ஒழிப்போம்

Subscribe to: Posts (Atom)