Aug 22

பூக்களுக்கு வன்னம் தந்தவன்
பட்டாம் பூச்சிக்கு வன்னம் தீட்டியவன்...

எனக்கு அதன் அழகை வர்னிக்கும்
திறனாவது - தந்திருக்கலாம்....

படைத்தவனுக்கு என் இந்த பாகுபாடு ?..
என்னவளை பார்க்கும் முன் ..என்னை சரியாக்கு

Mar 10

எந்திர மனிதர்களை

கண்டு பிடித்த மனிதனோ,

எந்திர வாழ்க்கை வாழ்கிறான்.

கண்டு பிடித்த எந்திர மனிதனுக்கு

மனித வாழ்கையை கற்றுக்கொடுக்க நினைத்து.

- கிருக்கியவனும் ஒரு எந்திர மனிதன்

Feb 15

செருப்பை குத்திய
முள்ளை திட்டுவதில்லை நாம்..
செருப்பை தாண்டியும்..
நம் கால்களை குத்த விட்ட
செருப்பை திட்டும் உலகம்

கரிசனம் காட்ட வழியில்லை..
செருப்பு பதில் சொல்லத் தெரியவில்லை

Feb 15

காதலையும் காதலியையும் சந்திக்க/கொண்டாட,
இந்த ஒரு நாள் மட்டும் போதும்
என்று நினைப்பவர்களுக்கு
மட்டும் - ‘இன்று’ காதலர் தினம்

Subscribe to: Posts (Atom)