இருவருமே ஒரே அச்சில் செய்யப்பட்டோமா ?

உன்னிடத்தில் பொறாமை இல்லை.
நான் என்ற தலைக்கனமுமில்லை.
நீயும் நானும் சேர்ந்தே இருந்தும்
நம் முடிவுகள் ஒத்து இருந்ததில்லை

இருந்தும் என்னை
விட்டு நீ விலகவில்லை  
அதனால் தான் என்னுள் இத்தனை குழப்பங்களா?

இல்லை,
உன் ஆசைகளை என்மீது
துளைத்து நீ மட்டும்
நல்லவனாக இருக்க இத்தனை நாடகம்.

இருந்தும் உன்னை விட்டு
விலக எனக்கும் வழி தெரியவில்லை! 
நமக்குள் இந்த போராட்டம் தொடரும்.

 

2 comments

  1. Anonymous  

    wonderful thougts deepak..keep up ur good writings :)

  2. தமிழ்  

    அருமை

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)