தாய் சிரித்தாள்.
முதன் முதலாய் நான்
தவழ்ந்த பொழுது.
இந்த ஊரே சிரிக்கிறது!
இன்று
நான் தள்ளாடி
தவழும் பொழுது.
-------------------
போதையில்...
மழலையின் ஞாபகம்
இன்னும் மறக்கவில்லையா நான் ?
இன்றும் தவழ்கிறேன்
தள்ளடுகிறேன் உருள்கிறேன்
நடக்கமுடியவில்லையே!!

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)