சருக்கு மரம்
என்றுதெரிந்தே,
லாபக் கணியைப்
பரிக்க நினைத்து ஏறி
ஏமாறி விழும்
மூடர்களின் கோவில்.

இலக்கை நோக்கி ஏரியப்பட்ட
அம்பல்ல நான்,
இலக்கின்றி சுற்றும்
கடிகார முல்லுமல்ல நான்.

நறுமனமின்றி பூக்கும்
காகிதப் பூவூமல்ல நான்,
மனந்து மயக்கும்
மரிக்கொழுந்துமல்ல நான்.

ஓய்விலே வாழும்
நத்தையல்ல நான்,
ஓயாமலிருக்க
ஏறும்பல்ல நான்.

உலகை மாற்ற நினைக்கும்
பொது-நலமுல்லவனல்ல நான்,
என்னை பற்றி மட்டும்
யோசித்துக் கொண்டிருக்கும்
சுயநலவாதியல்ல நான்!....

என்றோ இறந்த அசுரனுக்காக
இந்த வெகுளி குழந்தைகூட்டத்தின்
ஆட்டம் பாட்டம் இன்றும் தீரவில்லை.
ஆனால் தினம் வாட்டும்
இந்த பசி என்ற
அசுரனை என்று கொல்வோம்
என்று கொண்டாடுவோம்.

--------------------------
குறிப்பு:
வறுமையை ஒழிப்போம்

நேற்றும் இன்றும்
நாளையை நோக்கிச் செல்ல.
நான் இன்றும் நேற்றைய
தினங்களின் நினைவிலே
நாளையை நோக்கி
நகர்கிறேன்!

தாய் சிரித்தாள்.
முதன் முதலாய் நான்
தவழ்ந்த பொழுது.
இந்த ஊரே சிரிக்கிறது!
இன்று
நான் தள்ளாடி
தவழும் பொழுது.
-------------------
போதையில்...
மழலையின் ஞாபகம்
இன்னும் மறக்கவில்லையா நான் ?
இன்றும் தவழ்கிறேன்
தள்ளடுகிறேன் உருள்கிறேன்
நடக்கமுடியவில்லையே!!

சூரிய கதிருக்கு
தலை திருப்ப காத்திருக்கும்
சூரியகாந்தி மலரைப்போல,
உன் வருகைக்காக காத்திருந்தேன் நான்.

ஏனோ இந்த இரவு பகலின்
மோதலுக்கு உன்னை பலியாக்கினேன்
மன்னித்து விடு என்னை.

முட்டை ஒட்டிற்குள் அடைபட்ட
கோழியை போல் உடைபட
காத்திருப்பேன்...

கண்ணாடியில் தன் முகம்
பார்த்து ரசிக்கா விட்டாலும்
இந்த உலகம் உங்கள்
முகம் பார்த்து ரசிக்கும் !
விடுதலை வாங்கித்தந்ததால் அல்ல
ஒரு நூறு ரூபாயில் உன் முகம்
பார்த்த பிறகு ...

நிலவும் நீயும்
முப்பது நாட்களுக்கு ஒரு முறை தான்
முழுதாய் முளைப்பீர்கள்
ஆனால் நீ எத்தனை கொடியவன்
பிறந்தவுடன் என்னை விட்டு
ஓடி ஒளிகிறாய்!..

Subscribe to: Posts (Atom)